அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா….

யாரு ரஞ்சிதா மேடமா ? வாங்கம்மா வாங்க.

ஒன்றரை வருஷமா எங்கம்மா ஒளிஞ்சிருந்தீங்க? சி.டி.யில திடீர்னு வந்தமாதிரி சென்னைக்கும் திடீர்னு வந்திருக்கீங்க.

இப்பத்தான் உங்களப்பத்திக் கொஞ்சம் மறந்துபோய் இருந்தோம். மறுபடியும் நீங்களே மொதல்லேருந்து ஞாபகப்படுத்திறீங்களே.  நித்தி நல்லா இருக்காரா? அந்த சி.டி.பிரச்சனைக்கு அப்புறம் உங்க உறவுல எந்தத் தொந்தரவும் இல்லையே….

“நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லைன்னு” நீங்க மட்டும் சொன்னாப் போதுமா? அதை நித்யானந்தாவே ஒத்துக்கமாட்டேங்கிறாரே. “நான் ஆன்மீக ஆராய்ச்சிதானே செய்தேன். அதில் என்ன தவறு?” என்றல்லவா கேட்கிறார். சரி…நித்யானந்தாவுடன்தான் நீங்கள் இருக்கவில்லை. நாங்கள் நம்புகிறோம். அப்புறம் யாருடன்தான் இருந்தீர்கள் என்று சொன்னாலாவது நன்றாக இருக்குமல்லவா? 

அறிவியல் பூர்வமாகவே அந்த வீடியோக்கள் அனைத்தும் ஐத்ராபாத்தில் ஆராயப்பட்டு, அந்தப் படங்களில் இருப்பது நீங்கள்தான் என்பதும்– “மார்பிங்” எதுவும் செய்யப்படவில்லை என்பதும் அறிக்கையாக கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ரஞ்சிதா?

நெத்தியில பட்டையும் கழுத்துல கொட்டையும் போட்டுக்கிட்டு வந்து,  “நான் உத்தமி” ன்னு சொன்னாப் போதுமா? “கும்பிடுகிற கடவுளுடன் என்னைச் சேர்த்துக் கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படி இருக்கும்” என்கிறீர்களே…. கும்பிடுகிற கடவுள் கூப்பிடுகிற கடவுளா ஆனதுதானம்மா பிரச்சினையே.

“கதவைத் திற…. காற்று வரட்டும்னாரு”– கதவைத் திறந்தீங்களே…. காற்று மட்டுமா வந்தது? காசும் வந்ததுச்சில்ல.

இறைபக்தி, ஆன்மீகம், துறவறம் எல்லாத்தையும் கட்டில் மெத்தையில விரிச்சுக் காயப்போட்டுட்டீங்களே…. புத்தர் போன்றவர்கள் எல்லாம் சுகங்களை விலக்கித் துறவியாகினார்கள். ஆனால் உன் குருநாதரைப் போன்றவர்களோ துறவியாகி அல்லவா எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறார்கள்.

அந்த வீடியோவில நீங்க ரெண்டு பேரும் அடிக்கிற கூத்தப் பாத்தா… யம்மாடி…. உலகமே ஒரு சுத்து ஆடிப்போச்சில்ல? பெரிய அனுபவசாலி மாதிரி என்னமா ஆக்ட் கொடுக்கறீங்க?

அப்படியே அந்த வீடியோவுல நீயும் உன் நித்யாவும் என்னமோ ஒரு மாத்திரை சாப்பிடறீங்களே… அது என்ன மாத்திரைன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன். தெரிஞ்சுக்கிட்டா யூஸ்ஃபுல்லா இருக்குமோ என்னவோ?

அப்புறம் அதைவிட ஒரு முக்கியமான விஷயம். நித்திக்கு ஆண்மை இருக்கா இல்லையா அம்மணி? பத்திகையில பலமாதிரி எழுதறாங்கப்பா. உன்னையக் கேட்டா உண்மை தெரிஞ்சிடப்போகுது…

செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும்போது நித்தியானந்தாவின் ஆடை அலங்காரத்தைப் பார்த்தா…, பட்டத்து இளவரசருக்குச் சாமியார் வேஷம் போட்டது மாதிரியில்ல இருக்கு. வெளியில உலவும்போது வெள்ளை வேஷ்டி… கட்டில்ல குலவும்போது காவி வேஷ்டியா? நல்லாருக்குப்பா.

தம்பி நித்யானந்தா…. நீ எப்படியோ இருந்துட்டுப் போ, எங்களுக்குக் கவலையில்லை. ஆனால்– ராமானுஜர், ராகவேந்தர், ராமகிருஷ்ண பரமகம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றவர்களால் எல்லாம் புனிதப்பட்ட காவியையும், ருத்ராட்சையையும் தயவு செய்து அணியவேண்டாம்! நீங்கள் அடுத்த வீடியோவில் நடிக்கும் போதாவது கொஞ்சம் காவியின் மானத்தைக் காப்பாற்ற முயற்சியுங்கள். இதே விஷயம் அம்மா ஆட்சியில் மட்டும் நடந்திருந்தால், ஆசிரமம் மொத்தத்துக்கே ஆப்புதான். தப்பிச்சிட்டீங்க.

என்னமோ சன் டிவியும், தினகரனும் மட்டும்தான் உன்னுடைய படத்தை ஓடவிட்டு விளம்பரம் பண்ணி ஹிட்டாக்குன மாதிரி பத்தினி வேஷம் போடறியே. எல்லாப் பத்திரிகைகளுமே சுடச்சுட இந்தத் தோசையத் திருப்பிப்போட்டு நல்லாக் காசு பார்த்தாங்க..

தமிழ் சேனல்களான ஜெயா, ஜெயா பிளஸ், விஜய், ராஜ், மக்கள், பாலிமர், வசந்த், கலைஞர் டிவிக்கள் மற்றும் ஒரு டஜன் தெலுங்கு, கன்னட டிவிக்களிலும், ஆங்கில சேனல்களான சிஎன்என்&ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டூடே, டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் நக்கீரன், தினமலர் இணையதளத்திலும் இந்த சிடி காட்சிகள் வெளியானது.  குறிப்பாக டி.வி.9 என்ற சேனலில் உன்னோட படுக்கை அறைக் காட்சிகள் பற்றிய ஒரு முழுமையான செய்தித் தொகுப்பே ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இவர்களைப் பற்றியெல்லாம் வாய் திறக்காத நீயும் நித்தியும்…. சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதைப் பார்க்கும்போது,… யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளாய் என்பதும் தெரிகிறது.

என்னமோ பண்ணுங்க…அதுக்கு முன்னாடி– நீங்க சம்பந்தப்பட்ட வீடியோ சி.டி. இன்னும் நாலு பார்ட் ஒளிபரப்பு ஆகாம இருக்காமே. அது மட்டும் எப்போ வரும்னு சொல்லிட்டு உங்க ஜோலியப் பாத்தீங்கன்னா நல்லாருக்கும்.

ஆனா ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ ரஞ்சி…. குட்டு ஒடஞ்சு போச்சேன்னு ஓடி ஒளிஞ்சிருந்த நீயும் நித்யாவும், இன்னைக்கு ஆட்சி மாற்றத்தில குளிர்காய வந்திருக்கிறீர்கள். ஆணானப்பட்ட சங்கர மடத்தையே சந்திக்கு இழுத்து வந்த அம்மையாரிடம், உங்களோட பாச்சாவெல்லாம் பலிக்காது……ஜாக்கிரதை.

அய்யா மீடியாக்காரங்களே..பாசமுள்ள பத்திரிக்கை நிருபர்களே… இந்தப் புள்ளையோட பாயிண்ட நல்லா ஆராய்ச்சி பண்ணி, மிச்சம் மீதி இருக்குற பிட்டுகளையும் சேர்த்து அந்தப் படத்த மறுபடியும் ரிலீஸ் பண்ணுங்க சார்.. மக்கள் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பர்க்குறாங்க. ஏமாத்திடாதீங்க.