மனிதா, கொஞ்சம் மாறக் கற்றுக்கொள் !

ele

யானைகளுக்குக் கற்பு உண்டா? என்பது குறித்து ஒரு சுவராசியமான செய்தியைப் படிக்க நேர்ந்தது. 

அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

யானைகள் ஆயுசு முழுவதும் பரிசுத்தமாக இணைபிரியாமல் வாழக்கூடியவை. அதிகபட்சம் 50 அங்கத்தினர்களைக் கொண்ட குடும்பமாக, கடுமையான சட்டதிட்டங்களோடு, கூட்டு வாழக்கையில் காலம் தள்ளும் பழக்கம் கொண்டவை.

கற்பு விஷயத்தில் யானைகள் மிகவும் கண்டிப்பானவை. எதிர்பாராத காரணங்களால் விதவையாகிப் போன பெண் யானைகளுக்கு மட்டுமே, சில நேரங்களில் செக்ஸ் இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளுண்டு.

ஆனாலும், கைம்பெண் யானைகள் கணவனை இழந்தபிறகு- காலம் முழுவதும் சாகும் வரையிலும்- பிற யானைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை.

கொழுப்பெடுத்து அலையும் சில வாலிப யானைகள், விதவை யானைகளுக்கு சிக்னலை வீசிப்பார்க்க முயற்சிப்பதுண்டு. இந்த மேட்டர் வெளியே தெரிந்தால், கூட்டத்தில் இருக்கும் பெரிசுகள் ஒன்று சேர்ந்து கலாட்டா செய்து பஞ்சாயத்தைக் கூட்டி, குறும்பு செய்த யானையை தங்களது கூட்டத்திலிருந்து விலக்கி வைத்துவிடும்.

ஒருவேளை, அந்த காமுக வாலிப யானை அசகாய சூரனாக இருந்து முயற்சியில் வெற்றி பெற்று விட்டால்…. பிறகு பெரிய பிரளயம்தான்.
ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து ஒரேயடியாகக் களத்தில் குதிக்கும். போர்க்கால அடிப்படியில் செயல்பட்டு, அந்தப் பொறுக்கி யானையைக் காட்டின் மறு எல்லைவரை துரத்திக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துதான் மறுவேலை.

மனிதா…. யானையைப் படி. ஒழுக்கம் கற்றுக்கொள்.