ஜெர்மனி என்கிற நாட்டைப்பற்றி யாரும் கேள்விப்படாமல் இருக்கமுடியாது.
ஜெர்மனி என்கிற பெயரைச் சொல்லும்போதே…. ஹிட்லர் என்கிற சர்வாதிகாரியின் நினைவு நமது நெஞ்சுக்குள் வந்து உட்காரும். ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த பன்னிரண்டு வருட காலத்தில்…. ஒன்றல்ல, நூறல்ல, பதினாறு லட்சம் கொலைகளைச் செய்திருப்பதாக வரலாறு சொல்கிறது.
என்ன காரணத்திற்காக இத்தனை கொலைகள்?. ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஜெர்மனியர் அல்லாதவர்கள், ஜெர்மனிக்குள் மட்டுமல்ல…. உலகத்திலேயே இருக்ககூடாது என்கிற தீராத வெறி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் யூதர்களை ஹிட்லரும், ஹிட்லரைச் சந்தோஷப்படுத்த அவரது விசுவாசிகளும் கொன்று குவித்தனர்.
அவர்களுக்குப் பொழுதுபோக்கே…. எழுந்தவுடன் டீ சாப்பிடுகிற மாதிரி இவர்களைப் பிடித்துவந்து கொல்வதுதான். அதுவும் விதவிதமான ஸ்டைல்களில்…. ஒரு பெரிய அறை ஒன்றுக்குள் எல்லோரையும் கொண்டுவந்து நிர்வாணமாகப் பூட்டிவைத்து, விஷவாயு செலுத்தித் துடிதுடிக்க வைத்துக் கொல்வது அதில் ஒரு ஸ்டைல்.
சரி விடுங்கள்…. அப்போதைய ஜெர்மனியை மறந்துவிட்டு, இப்போதைய ஜெர்மனிக்கு வருவோம்…
ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதிகளிடமிருந்து அதற்காக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்…. கிளப்புகளுக்கோ விடுதிகளுக்கோ செல்லாமல் தெரு ஓரங்களில் விபச்சாரம் செய்பவர்களிடம், வரியை எப்படி வசூல் செய்வது என்று யோசித்து– அதற்கென ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது ஜெர்மனின் பான் நகர நிர்வாகம்.
பான் நகரில் இரவு 8.15 முதல் அதிகாலை 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தெரு ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளிகள் வரி செலுத்துவதற்காக செக்ஸ் வரி மெஷின்கள் பொருத்தப்படும். விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த ரசீதை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அன்று இரவு முழுவதும் பாலியல் தொழில் செய்யலாம். போலீசார் பிடிக்கும்போது அவர் இந்த ரசீதை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர் மீண்டும் இந்தத் தொழில் செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும். பான் நகரில் மட்டும் சுமாராக 200-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.
உலகின் மிகப் பழமையான தொழில் எனப்படும் பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க, உலக நாடுகளிலேயே முதன் முறையாக ஜெர்மனியில்தான் வரி வசூலிக்கும் மெஷின் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
செக்ஸ் தொழிலுக்கே முறையாக வரி செலுத்தும் ஜெர்மனியை…. எந்தத் தொழிலாக இருந்தாலும் வரி ஏய்ப்புச் செய்யத் துடிக்கிற இந்தியா கொஞ்சம் கவனிக்கட்டும்!
இது குறித்து — இந்தத் தொழிலில் தொடர்புடையவரும், ரெட் லைட்டர்ஸ் புரட்டெக்சன் கவுன்சிலைச் சேர்ந்தவருமான பம்பாய் துவாரகாவின் கருத்து….
“வரவேற்க வேண்டிய திட்டம். பயந்து பயந்து தொழில் செய்யவேண்டிய தொல்லை இல்லை. சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. வரி செலுத்துவோர் பட்டியலிலும் அவர்கள் வந்துவிடுகிறார்கள். இந்தியாவிலும் இதைச் செய்ய வேண்டும். இங்கு மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பொய் முகமூடி அணிந்துகொண்டு புத்தர் வேஷம் போட்டு அலைவதால் நமக்குத்தான் நஷ்டம். வருமானத்துக்கு வருமானமும் வரும். குற்றங்களும் சமுதாயத்தில் குறையும்….
எந்த ஊரில் இந்தத் தொழில் இல்லாமல் இருக்கிறது? இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா? மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன்? சென்னையிலிருக்கும் என் நண்பர்களே சொல்லிக் கேட்டிருக்கிறேன்… இரவு பத்துமணிக்கு மேல் எல்லாமே கிடைக்குமென்று. பிறகு எதற்கு இந்த வேஷம்?
எங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள்… முக்கியத் தலைவர்கள் எத்தனை பேருடைய முகவரிகள் சிதறுகிறது என்று…..”
போதுமடா சாமி !
exactly corect friend………
Thanks….
‘தமிழ்நாட்டை சொர்க்கபுரியாக மாத்த மத்திய அரசு காசு கொடுத்து உதவ மாட்டேங்குது’னு அந்தம்மா புலம்பிகிட்டு இருக்காக.. அவருக்கு இந்த வருவாய் யோசனையை சொல்லுங்களேன்.. வசூல் பிச்சுக்கிட்டு போகுமில்ல..!
உங்களைப் போன்ற பத்திகையாளர்களால் மட்டுமே இது எளிதாக முடியக்கூடிய காரியம்…. முயர்சித்துப் பாருங்கள்.
the sex business regularies in india
It should be regularized.
good thought and idea. it must be implemented, revenue for govt, legal business for people (whoever prefers to take up that profession).
That’s why we are inducing it..