படமும் கதை சொல்லும்…

அப்படிப் போடுங்க அருவாளை….

வாகனங்களை ஓட்டும் போது செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாக கூட இருக்கலாம் இது வசனம் அல்ல… 

புகைப்படத்தில் இறந்து கிடப்பவருக்கும் அப்படித்தான் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அழைத்தது எமன் என தெரியாமல் செல்போனை எடுத்து பேசியபடி பைக் ஓட்டியவர் விபத்தை தடுக்க காவல்துறை வைத்து இருந்த வேக தடுப்பில் மோதி பலியானார்… 

இறந்து போன கணவனை மடியில் போட்டு மனைவி கதறி அழ, பாசமாய் தூக்கி வளர்த்த தந்தை தன்னை பார்க்காமலே போய்விட்டாரே என்று அவரது மகள் அலறி துடிக்க, கண்கள் கலங்கியபடி பதறி போய் நின்றனர் பார்த்தவர்கள்… 

வாகனங்கள் ஓட்டும்போது உங்களுக்காக மனைவி, குழந்தைகள் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்…!