நடிகை சோனா என்ன நாப்கின் பேப்பாரா?

ஆண்கள்….

“டிஷ்யூ” பேப்பரைப் போன்றவர்கள்.  திருமணம் என்பது முட்டாள் தனமானது. ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது, அதை விட முட்டாள்தனமானது.

ஆண்களை செக்ஸுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, டிஷ்யூ பேப்பர் மாதிரி தூக்கி எறிந்து விட வேண்டும்!”

- காசுக்காக எதையும் காட்டவும் விற்கவும் தயாராக இருக்கிற கவர்ச்சி நடிகை சோனாவின் பேட்டி இது.

அவங்க அவங்க தொழில் அவங்களுக்குப் பெரிசாத்தான் தெரியும்!
ஆனாலும்- உன்னோட தொழிலை நீ உன்னோடதான் நிறுத்திக்கனும். ஊரு மேலே ஏத்தக்கூடாது!
ஆண்கள் டிஷ்யூ பேப்பர் மாதிரின்னா…. நடிகை சோனா என்ன நாப்கின் பேப்பாரான்னு கேட்க எவ்ளோ நேரம் ஆகும்னு சோனாவுக்கு அவரோட எடுபிடிகள் யாராவது சொல்லிக்கொடுத்தாத் தேவலை!
அடுத்ததாக….. சோனா மாதிரியே இன்னொரு சொங்கிப் பயல்…. 
பெயர் தெரியாத பிக்காளி சாமியார் ஒருவன் சொல்லியிருக்கிறான்…..
ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்குவேன் என்று!

சமூக ஆர்வலரும்,  இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மீது இப்படி ஒரு மிரட்டலை ஒரு சந்நியாசி விட முடியும் என்றால்…..

அந்த சந்நியாசியின் கழுத்தைத் துண்டிக்கும்  உரிமை நமக்கு இருக்கிறது அல்லவா ?
ஏந்தான் இப்படியெல்லாம் உளறிக் கொட்டுகிறார்களோ தெரியவில்லை.

காற்றில் பரவும் கதைகள் …

உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“வந்துருச்சா?” என்றாள்.

“என்ன?” என்றேன்.

“அந்த எழவுதான்…”

“வரும்… ஆனா, வராது” என்றபடி சிரித்துக்கொண்டே நைட்டிக்கு மாறினேன்.

வத்சலா சிரிக்கவில்லை.

“சிந்துக்கா கேட்டுட்டே இருக்காடி” என்றாள். அவள் குரலில் ஒரு கீறல் தென்பட்டது.

“ஏன்… நாப்கின் வாங்கிக் கொடுக்கப் போறாளாமா?” என்றேன்.

வத்சலா முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாள்.

“உனக்குப் புரியல. நீ ஏன் இன்னும் இந்த மாசம் உக்காரலனு கேட்டுட்டே இருக்கா!”

“மாசமா இருக்கேன்னு சொல்லிடு” என்றபடி சப்பாத்தியை ஹாட் பேக்கில் இருந்து எடுத்தேன். அவள் என்னையே பார்த்தாள். வேக வேகமாகத் துணிகளை மடிக்க ஆரம்பித்தாள் வத்சலா.

“என்னப்பத்தி அப்படி என்ன கவலை உங்க அக்காவுக்கு?” என்றேன்.

“இல்லடி. ஹவுஸ் ஓனர் அவங்கள நம்பித்தான் வீட்டைக் கொடுத்து இருக்காங்களாம், அதான்…”

“அவளை வேற வீடு பாத்துக்கச் சொல்லு. இல்லன்னா, நான் போயிடுறேன். சப்ஜி இவ்ளோதான் செஞ்சியா?”

“ரொம்ப முக்கியம் போ. இஞ்சியை அரைச்சி சப்ஜி வைக்கேன். அப்பவாச்சும் உனக்கு வரட்டும்”.

“கொஞ்சம் எள்ளும் சேர்த்துக்க’ என்றேன். அவள் தலையில் அடித்துக்கொண்டு, துணிகளை சூட்கேஸில் அடைத்தாள்.

அவளும் நானும் சென்னையில் வேலைக்கு வந்த பிறகு, கம்பெனியில் பழக்கமாகி சேர்ந்து கொண்டவள் சிந்துக்கா.

சிந்துக்காவின் சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் பிறகு குடிபெயர்ந்துவிட்டோம். கறி மீன் சாப்பிடக் கூடாது போன்ற கண்டிப்புகள் இல்லாத வீடு என்பதால், எனக்கும் பிடித்துப் போயிற்று.

ஆனாலும், மீனில் இல்லாத பிரச்னை என் மாதவிலக்கில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் கணக்கெடுக்காத அதை அவள் துல்லியமாகக் கணக்கெடுத்து வைத்திருந்தாள்.

தட்டைக் கழுவிவிட்டு பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வத்சலாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவைத்தேன். “எனக்கு வந்துவிட்டால், ரஜினி படம் மாதிரி சிந்து போஸ்டர் அடிச்சு ஆபீஸ்ல ஒட்டுவாளா?”

வத்சலா முதுகு குலுங்கச் சிரித்தாள். வத்சலாவும் தூங்கவில்லை என்று நினைக்கிறேன். லேசாகப் புரண்டு படுத்தாள்.

அடுத்த நாள் குளித்துவிட்டு வந்ததும், “பப்பாளி உஷா” என்றாள் என்னிடம். “வந்துடும்” என்றாள் கொஞ்ச நேரம் கழித்து. எரிச்சலாக இருந்தது.

“போன ஜென்மத்துல அக்காதான் மகப்பேறு மருத்துவராம்” என்றேன்.

அவள் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது. “மாசா மாசம் வரலன்னா எப்படிப் பயப்படுறோம்? உனக்குக் கிண்டலா இருக்கா?” என்றாள்.

“அது என்ன கள்ளனா? உங்களுக்கு என்ன தான் பிரச்னைக்கா?” என்றேன்.

“உனக்குப் பசங்க பழக்கம் வேற இருக்கே?”

“எப்ப, என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். ஒண்ணும் தெரியாத புள்ள மாதிரி உங்களாட்டம் நடிக்க எனக்குத் தெரியாது” என்றேன்.

சிந்துக்காவின் முகம் மிளகாப்பழம் நசிந்தது மாதிரி வித்தியாசமான வண்ணத்தில் சிவந்தது. அலுவலகம் வந்ததும் வத்சலா என்னைத் தனியாகக் கூப்பிட்டு, “சிந்துக்கா இனி ஹாஸ்டல் போறாங்களாம்” என்றாள்.

“சரி… வத்சு. இன்னிக்கு ராத்திரி நான் வர லேட்டாகும்” என்றேன்.

சரியாக ஒரு வாரத்தில் சிந்து ஹாஸ்டல் பார்த்துப் போனாள். எனக்கு மாதவிலக்கு சரியாக வராததன் ஹார்மோன் காரணம், அவளை வெகுவாகப் பாதித்ததுபோல் இருந்தது. அலுவலகத்திலும் முன்புபோல என்னிடம் பேசுவதைத் தவிர்த்தாள். மத்தியான நேரங்களில் கூட வனஜாவுடன் சாப்பிட்டாள்.

மூன்றாவது நாளே வனஜா என்னிடம் வந்து, “உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியாமே?” என்றாள். வாயில் கெட்ட வார்த்தை வந்து விழுந்தது. கெட்ட வார்த்தை பேசும் பெண்ணாக என்னைக் கொண்டுபோய் மேனேஜரிடம் வனஜா பற்றவைத்தாள்.

மறு நாள் மேனேஜர் என்னைக் கூப்பிட்டு, “ஆபீஸ்ல கெட்ட வார்த்தைகள்ல பேசக் கூடாது” என்றார்.

“கூட வேலை பாக்குறவங்க, யார் யார்கூட ரூம் போடுறாங்கன்னு பேசினா, திரும்பக் கெட்ட வார்த்தைதான் என்னால பேச முடியும்” என்றேன்.

அவர் ஒரு நொடி அதிர்ந்து, “டோன்ட் ரிப்பீட் திஸ்” என்றார் சத்தம் இல்லாமல்.

“தேவை இல்லாம, இனிமே யூஸ் பண்ண மாட்டேன்” என்றபடி வெளியே வந்தேன்.

“உனக்கு வலிக்கவே இல்லையாடி?” என்றாள் வத்சலா.

“உனக்குத் தெரியாதுடி. நீ கிருஷ்ணனோட ரூம் போட்டு இருந்தனு வனஜா பேசியிருக்கா, சிந்துக்காகிட்ட” என்றாள்.

கிட்டத்தட்ட இவர்களோடு பேசாமல் இருப்பதே உசிதம் என்று தோன்றிற்று. நான் தனி வீடு எடுத்துப் போகலாம் என்று யோசித்தபோது, வத்சலாவும் வருவதாகச் சொன்னாள்.

வீடு கிடைப்பது அவ்வளவு சாதாரணமாக இல்லை. பெரும்பாடுபட்டு ஒரு ஃப்ளாட்டை 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிடித்துக் குடி போனோம்.

வாசலில் பூஞ்செடி வைத்தோம். பாலு மகேந்திரா பட வீடு மாதிரி மெல்லிய வெளிச்சத்தை ஜன்னல் திரையோடி வரவிட்டோம். அலுவலகத்தில் என்ன நடந்ததோ, வனஜா சொன்னபடி எல்லாம் மேனேஜர் கேட்டார். அவர் மார்க்கெட்டிங் ஃபீல்டில் இருந்து அட்மினிஸ்ட்ரேஷனுக்கு வந்ததால், எல்லாவற்றையும் மார்க்கெட் பண்ணுவதுபோலவே அணுகினார். நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை என்று தோன்றின நேரம், தேவை இல்லாமல் கூப்பிட்டுத் திட்டினார்.

“உனக்குத் தெரியுமாடி. அந்த ஆளுக்கு இப்படிலாம் சொல்லிக் கொடுக்கிறது ஒன்றக் கண்ணிதான்” என்றாள் வத்சலா. வனஜாவை ஒன்றரைக் கண்ணி என்று கூப்பிடுவதில் எனக்குப் பிரச்னைகள் இருப்பினும், கோபம் காரணமாக வத்சலா சொல்வதை நான் தடுக்கவில்லை.

எனக்கு ஒரு அக்கா இருந்தாள். கல்யாணமாகி அவள் கணவனுக்குப் பணம் காய்ச்சி மரமாக இருந்தாள். பிள்ளை பெற்று, சமைத்துப்போட்டாள். அலுவலகத்தில் மற்ற ஆண்களோடு பேசாமல் இருந்து கற்பைப் பாதுகாத்தாள்.

ஆனாலும் தினமும், “அவனோட படுத்தியா? இவனோட படுத்தியா” போன்ற கேள்விகளைக் கேட்ட புருஷனோடு படுத்துக்கொண்டாள். அவன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் விவாகரத்து தாட்களில் ஜொலித்தபோதும், குழந்தைகளை அவளிடம் இருந்து பறித்துக்கொண்டபோதும், பாலிடால் குடித்து செத்துப்போனாள்.

கனம் நீதிபதி அவர்களே, என்று நான் ஒரு கடிதம் எழுதினேன். அது ஒரு பத்திரிகையில் கதையாக வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண், “அந்தக் குழந்தைகள் அவனுக்குப் பிறந்தது அல்ல என்று சொல்லியிருக்க வேண்டும்” என்று வாசகர் கடிதம் எழுதினார்.

அக்காவின் மரணம் ஏற்படுத்திய வலியைக் காட்டிலும், அந்தப் பெண் அளவுக்குக்கூட அக்கா போராடத் துணியாதது வலியைக் கொடுத்தது.

வெறும் மார்பும் பெண் அவயம் தாண்டியும் வாழ்வு இருப்பதை யார்,எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்? வத்சலா புரிந்துகொள்வாளா? எனக்குத் தூரம் வரவில்லை என்று கவலைப்படும் சிந்துவுக்கு இது புரியுமா?

அன்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. மீனாட்சி அம்மன்போல் மும்முலைகளோடு உலவிய பெண்களோடான ஒரு தேசம். பெண்ணை சமமாகப் பார்க்கும் ஆண்கள் கண்டதும் இரு முலைகள் ஆகுது. காலையில் எழுந்ததும் வத்சலாவிடம் சொன்னதும் உவ்வே என்றாள். நேற்று தொலைக்காட்சியில் கதாநாயகியின் உடலைத் துளைத்த ஒரு காட்சியை அவள் லஜ்ஜை இன்றிப் பார்த்ததை நினைவுபடுத்தினேன்.

“அது வேற… இது வேற” என்றாள்.

அடுத்த வாரம் வனஜாவுக்கு நிச்சயமானதாகவும், மாப்பிள்ளையை மேனேஜரே தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னார்கள். தொடர்ந்து, நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த மேனேஜரின் மனைவி ட்ரீட்மென்ட் மூலமாகக் குழந்தை உண்டாகி இருப்பதாகவும் சொன்னார்கள்.

கேட்பவர்கள் இருக்கும் வரை, சொல்லப்படும் கதைகள் உலவும் என்றே தோன்றிற்று.

அதற்குப் பிறகு நடந்த விஷயம்தான் சுவாரஸ்யமானது.

மத்தியான நேரங்களில், சாப்பிட்டுவிட்டு வத்சுவை ஏதாவது பாடச் சொல்லிக் கேட்பேன். அன்று வத்சு, “ஒரு கணம் ஒரு யுகமாக” பாடலைப் பாடிக்கொண்டு இருந்தாள். ஜானகிவிட்ட இடத்தில் இருந்து, இளையராஜா அதைத் தொடர்ந்து பாடுவது எனக்கு உயிரை உலுக்கும். புளிய மரத்தை உலுக்கினால் புளியம் பூ உதிர்வதுபோல், என்னுள் ஏதோ சிதறிப்போகும். நான் கண் மூடி, அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன். வானமும் பூந்தென்றலும் வாழ்த்துதே.

“இங்க என்ன பாட்டுக் கச்சேரியா நடக்குது?’ – கண் விழித்தால் மேனேஜர். வேறு எதுவுமே பேசாமல் ரூமுக்குப் போய் மெமோ கொடுத்தார்.

“அன்ரூலி பிஹேவியர்” என்று போட்டு, இரண்டு நாட்கள் வத்சுவை சஸ்பெண்ட் செய்து, எனக்கு “ஏன் கண்ணை மூடித் தூங்கினாய்?’ என்று விளக்கம் கேட்டு.

“என்னடி இது?” என்றாள் வத்சு கண் கலங்கி. நான் மேனேஜர் ரூம் கதவைத் தட்டி, அவர் கம் இன் சொல்லும் முன் அவர் முன் நின்றேன்.

“ஒரு சாதாரண விஷயத்தை இவ்ளோ பெரிசாக்கினீங்கன்னா…” என்று தொடர்வதற்குள். “ஐ நீட் நோ எக்ஸ்ப்ளனேஷன்ஸ்…’ என்றார்.

“எக்ஸ்ப்ளனேஷன் இல்லை சார்… ரெஸிக்னேஷன். வத்சுவும் நானும் உங்களூடைய சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால், ராஜினாமா பண்றோம். பட், ஒரு விஷயம் சார்…” என்றேன்.

“என்ன?” என்றார் கறாராக.

“வீட்டுக்குப் போய் யூ டியூப்ல அந்தப் பாட்டைக் கேளுங்க. யூ வில் லைக் இட்” என்றேன்.

அவர் முகம் வெளுத்துப் போய்க் கத்தினார். “உன் கிண்டலை அடுத்த கம்பெனில காட்டித் தொலை…’

சட்டென்று அவர் சட்டையைக் கொத்தாகப் பிடித்து மூக்கில் தாக்கினேன். “மரியாதை கொடுத்துப் பேசுடா” என்றேன்.

‘ஹெல்ப், ஹெல்ப்” என்று அலறினார்.

வனஜா ஆபீஸ் பையனுடன் ஓடி வந்து அவரைப் பிடித்துக்கொண்டாள். அந்த நிமிடம் ஏன் அவ்வளவு அகோரமாக நடந்துகொண்டேன் என்று இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை. நான் வன்முறைக்கு எதிரானவள் என்று எப்படிப் பிரகடனப்படுத்த? என்ற கவலை ஏற்பட்டது.

வத்சு அதிர்ச்சியாகவே பார்த்தாள். அவளைக் கலந்து பேசாமலே நான் அவளுக்காக முடிவு எடுத்தது குறித்து, இன்று வரை அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

இரண்டே வாரங்களில், வேறு ஒரு கம்பெனியில் சேர்ந்தோம். இந்த மேனேஜர் மிகவும் நல்லவராக அமைந்தது எங்களுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது. இந்த சந்தோஷமான சூழலில், நானும் வத்சுவும் பழைய ஆபீஸ் பற்றியும், அங்கு உள்ள நல்லவர்கள்பற்றியும் பேச மறந்தோம். இடையில்கூட புது அலுவலகக் காசாளரிடம் ஒரு முறை வத்சு பழைய ஆபீஸ் கலாட்டாக்களைப் பேசிக்கொண்டு இருந்தாள். நான் அதைக் கேட்க விரும்பவில்லை என்றாலும், என் கனவுகளில் பழைய மேனேஜர் அலைந்தபடியே இருந்தார்.

அவருக்கு மிகவும் ஆகிருதியான உருவம். எனவே, அவரும் வனஜாவும் லிஃப்ட்டை உபயோகிக்க மாட்டார்கள். ஒருநாள், அவர் படி ஏறிக்கொண்டு இருக்கையில், பாதிக்கு மேல் படிக்கட்டுகள் மறைந்து லிஃப்ட் தோன்றியதில் இருவரும் மருள்கிறார்கள். அந்த நேரத்தில் லிஃப்ட் கதவு திறந்து, சிந்துக்கா அவர்களை உள்ளே அழைத்தாள். அவர்கள் ஏனோ அவளுக்குப் பதில் சொல்லாமல் திரும்ப கீழே இறங்கி நடந்தார்கள்.

இந்தக் கனவை நான் வத்சுவிடம் சொன்னதும், அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். நாங்களும் ஒரு வகையில் வதந்தி பரப்பும் மன நிலையில்தான் இருக்கிறோமோ என்று தோன்றிற்று.

இனி, அவர்களைப்பற்றி ஏதும் பேசக் கூடாது என சத்தியம் செய்துகொண்டோம். அன்று மாலையே வத்சு தயங்கித் தயங்கி சொன்னாள்., “அந்தப் பழைய மேனேஜரோட மனைவிக்கு போன வாரம் வளைகாப்புலாம் நடந்திருக்குடி. நேத்து ஏதோ சிக்கலாகி குழந்தை இறந்துடுச்சாம்.”

தூக்கி வாரிப் போட்டது எனக்கு. வயிற்றுக்குள் குழந்தை இறக்க… அந்தப் பெண் மன உளைச்சலோடு குழந்தையை வெளியேற்றும் காட்சி மனசுக்குள் தவித்தது.

வத்சு ஏதோ சொல்ல வந்தாள். “அவன் பண்ணின பாவம்” என்று மட்டும் அவள் சொல்லிவிடக் கூடாது என்று கண்களை இறுக மூடிக்கொண்டேன்!

நன்றி – எழுத்தாளர் தமயந்தி மற்றும் விகடன்.

ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்வாவும் கொடுத்திட்டாகளே!

 

அம்மா ஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக என்று கிராமத்து மக்கள் பூரித்துப் போகும்போதே நினைத்தேன்…… அம்மா சமயம் பார்த்து அல்வாவும் கொடுப்பாக என்று!

ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த ஆறு மாதங்களாக, சமச்சீர் கல்வியில் சண்டித்தனம்….. சட்டசபை மாற்றத்தில் தேவையற்ற வேகம்……. அண்ணா நூலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்றுதல்…. பரமக்குடிக் கலவரம்…… 13000 பேர் வேலை நீக்கம் என்று…….

“ரொம்ப நல்லவங்க” போல பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்த ஜெயலலிதா, முதல் முறையாக பஸ் கட்டணம், பால் விலைகளைக் கன்னாபின்னா என உயர்த்தி, வாக்களித்த மக்களின் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்.

போதாக்குறைக்கு மின் கட்டணத்தையும் விரைவில் உயர்த்தப் போவதாக இன்னொரு குண்டையும் வீசியிருக்கிறார். (இல்லாத மின்சாரத்துக்கு எதுக்கு விலையேற்றம் என்று புரியவில்லை).

ஜெயாவின் சிந்தனை இன்னுமே சீராகவில்லை என்பது போலத்தான் தெரிகிறது.

கட்டிட மாற்றங்கள் அலுத்துப் போனதால், கட்டண மாற்றங்களை ஆரம்பித்துவிட்டார் போல் தெரிகிறது. மாத்துனாத்தானே உயர்நீதிமன்றம் தடை போடுது…… அதனால உயர்த்தலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போல…. இப்ப கோர்ட் என்ன பண்ணமுடியும்?

“வெள்ளம் வரும்முன்பே அணை போட வேண்டும். மரணப் படுக்கையில் உள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தற்போது ஆக்சிஜன் வழங்கவில்லை எனில், அவை முற்றிலும் செயலற்றுவிடும். அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

(அது சரி…. பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே சாகப்போற கண்டிசன்ல இருக்கிறதால- உடனே ஆக்சிஜன் குடுக்கணும், இல்லாட்டி செத்துப் போய்டும்னு சொல்லிச் சொல்லியே…… எங்கள் ரத்தத்தை உறிஞ்சி, எங்களுக்கும் ஆக்சிஜன் செலுத்தவேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விடுவீங்க போல இருக்கே மேடம்!)

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதற்கு மேலும் ஒரு காமெடி செய்திருக்கிறார் பாருங்கள்….

“பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து செயல்பட வைக்க, மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவிகேட்க முடியும்? தமிழகத்தைச் சீரமைக்க மத்திய அரசு ஓரளவுக்காவது உதவி செய்யும் என்று, ஆறு மாதங்களாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு, தமிழகத்தை அடியோடு புறக்கணித்துக் கைவிட்டுவிட்ட நிலையில், எனது அருமை மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு எங்கே செல்ல முடியும்? எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு, உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”.

ஆமாமா…. எங்களிடம் வராமல் நீங்கள் வேறு எங்கு செல்லமுடியும்? முடியாதுதான். இன்னும் என்ன என்னவெல்லாம் ஏத்த முடியுமோ ஏத்திக்கோங்கம்மா…. நாங்கதான் ஏத்துக்கத் தயாராக இருக்கிறோமே!

ஆனால், ஒரு சின்ன சந்தேகம் மேடம்….

உண்மையிலேயே இதுதான் காரணம்னு நீங்க நினைச்சிருந்தா… இதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடியே பண்ணி இருக்கலாமே. ஏன் பண்ணலே? அவ்வளவு விவரமா இருக்கீங்க….. அப்படித்தானே. ஆக, நீங்களும் அப்படித்தான்னு சொல்லாம சொல்லிட்டீங்க.

மம்மி அரசின் கஜானாவிலிருந்து ஆட்டுக் குட்டியும் கண்ணுக் குட்டியும் நாப்கினும் கொடுத்துட்டு, மத்திய அரசிடம் போயிப் பிச்சை கேட்ட மாதிரி நடிச்சா, பிரதமர் சிங்கு கொடுதுருவாரா என்ன? யார் கேட்டார்கள் ஆட்டுக் குட்டியும் கண்ணுக் குட்டியும் நாப்கினும்? மத்திய அரசுக்குத் தெரியாதா இதை எல்லாம் இலவசமாக கொடுக்க?

நிர்வாகத்தைச் சரியா நடத்தத் தெரியலேன்னா….. அந்தப் பழியைத் தூக்கி மத்தவங்க மேல போடுறதுல ஒன்னும் தப்பில்ல. மத்திய அரசு, கருணாநிதி, முடிஞ்சா அமெரிக்கா…. இப்படி யாரெல்லாம் பயப்படுகிற மாதிரி உங்களுக்குத் தோணுதோ, அவங்க மேல எல்லாம் பழியைப் போட்டுட்டு நீங்க பாட்டுக்கு விலைய ஏத்துங்க மேடம்..

இங்கே இருக்கிற மக்கள் எல்லாம் பொதி சுமந்தே பழக்கப் பட்ட ஒட்டகங்கள்தான். எவ்வளவு ஏத்துனாலும் தாங்குவாங்க. நிர்வாகத்தைச் சரி பண்ணக் கத்துக்கிற வரைக்கும் நீங்க உங்க இஷ்டத்துக்கு ஏத்துங்க மேடம்.

ஏன் பீர்..விஸ்கி..பிராந்தி போன்ற மது வகைகளின் விலையை உயர்த்த வேண்டியதுதானே? அதில் என்ன கஷ்டம்? சிகரெட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே?அதை விட்டு விட்டு மக்களின் அன்றாட இன்றியமையாத பொருளான பாலின் விலையையும்… பஸ் கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்? ஆடம்பரப் பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கலாமே. அதை விட்டு ஏன் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தினீர்கள்?

பொது மக்களுக்குத்தான் கட்டண உயர்வு….. ஆனால், ஜெயலலிதாவுக்கு மட்டும் ஹெலிகாப்டர் எல்லாம் வாடகைச் சைக்கிள் மாதிரி. நீங்க ஹெலிகாப்டர்ல போறதை நிறுத்தினாலே பாதி விலைவாசியைக் குறைக்கலாம். உங்களோட அமைச்சர் பெருமக்களைக் கூப்பிட்டு அநாவசியச் செலவுகளைக் குறைக்கச் சொல்லி உத்தரவு போடுங்கள். ஏ.சி. இல்லாமல் அவர்களால் இருக்க முடியுமா, முடியாதா என்று மட்டும் கேளுங்கள். பாதியளவு கடன் சுமை குறைந்துவிடும்.

சாதாரண பஸ்களுக்குக்கூட 70 முதல் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பஞ்சரானால் கூட பாதியோடு நின்றுவிடுகிற பஸ்களை வைத்துக்கொண்டு கட்டணத்தை ஏற்றுவதற்கு வெட்கமாக இல்லை?….

மிகவும் அதிகமாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை, முதலில் எதிர்ப்போடும் பிறகு முணு முணுப்போடும் இறுதியில் வேறு வழி இல்லாமலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள். ஆனால், சொகுசுப்பேருந்து போலப் பளபளவெனக் காட்சி தரும் தனியார் பேருந்துகளுக்கும் கிலோ மீட்டருக்கு 56 காசுகள், நசுங்கிப்போன தகர டப்பா போல காட்சி தரும் அரசு பேருந்துகளுக்கும் அதே 56 காசுகளா? கட்டணம் நிர்ணயிக்கும் போது கிலோ மீட்டரை மட்டும் அளவு கோலாகக் கொண்டால் நியாயமல்ல. அந்த 56 காசுகளால் மக்களுக்கு ஒரே மாதிரியான பலன் கிட்டுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

அரசு டெப்போக்களில் டயர் வாங்காமலேயே வாங்கப்பட்டதாகக் கணக்கு எழுதி சம்பாதிப்பதும், பழைய உதிரி பாகங்களை காயலான் கடையில் வாங்கிப் புதிது போலக் கணக்கு எழுதுவதும் கண்காணிக்கப்பட வேண்டும். அல்லது பஸ் தனியார் மயமாக்கப்பட வேண்டும். இப்போது மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் எல்லாம் தனியார் கையில் தானே உள்ளது?..

அவர்கள் மட்டும் அநியாயமாக டிக்கெட் விலையை ஏற்ற மாட்டார்களா? என்பீர்கள். ஆம். ஏற்றுவார்கள். ஆனால் சேவையாவது திருப்தியாக இருக்கும் அல்லவா?. காயலான் கடைப் பேருந்துகளுக்கு சொகுசுப் பேருந்து, இடைநில்லாப் பேருந்து என்று விதம் விதமாகப் பெயரிட்டு மொட்டை அடிக்கும் பேத்து மாத்து இருக்காதல்லவா? அதற்குமேல் அரசுதான் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஓட்டுக்களை அள்ளுவதற்காக இலவசங்களை வாரி இறைத்ததன் விளைவுதான் இது. இலவசங்களும் வேண்டும் விலை ஏறக்கூடாது என்றால் எப்படி? இலவசங்களுக்கான செலவு நம் தலையில்தான் விடியும் என்பது இப்போதாவது புரிகிறதா? ஓடி ஓடி இலவசம் வாங்கியதன் பயன் இன்று மொத்தமாய் நம் தலையில் விடிகிறது.

இலவச மின்சாரத்தை உடனடியாக நிறுத்துங்கள். சரியான கட்டணம் எதுவோ அதை வசூலியுங்கள். நரேந்திரமோடி சொன்னது போல, தடையில்லாத, தரமான மின்சாரம் வேண்டுமானால் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று கூறுங்கள்.

ரேஷனில் வழங்கப்படும் இருபது கிலோ அரிசி தவிர, இலவசம் என்பதே கிடையாது என்று துணிந்து அறிவியுங்கள்; எப்படியும் ஐந்தாண்டுகள் உங்கள் ஆட்சி தான். இனி இந்த மக்களால் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது. எதிர்கட்சிகள் என்பதே தமிழகத்தில் இல்லை. இதுவும் உங்களின் பலமே. நீங்கள் எது செய்தாலும் கேட்க ஆளில்லை.

மக்கள்….. அவர்கள் கிடக்கிறார்கள். ஒரு நாளும் அவர்கள் வீதிக்கு வந்து போராடப் போவதில்லை. மிஞ்சிப் போனால் ஒரு நாலு நாள் சத்தம் போடுவார்கள். பிறகு அமைதியாகி விடுவார்கள். அதுவும் நடுத்தர மக்கள்தான்.பாவம், அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது?

வலைத்தளங்களில் கருத்து எழுதுவது, பத்திரிகைகளைப் படித்துவிட்டுப் பேருந்துகளிலும், ரயில்களிலும் விவாதிப்பது….. என்று சில நாள் புலம்புவார்கள். அடித்தள மக்களை இந்தப் பிரச்சினைகள் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. அப்படியே ஏதாவது பிரச்சினை வந்தாலும் இருக்கவே இருக்கிறது…..; எம்.ஜி.ஆர்.படங்கள், பாடல்கள்….. அதையும் தாண்டி டாஸ்மாக்……

உயர்தட்டு மக்களுக்கோ எவ்வளவு ஏறினாலும் அது எறும்புக்கடி. உணரவே முடியாது. பாவப்பட்டவர்கள் நடுத்தர வர்க்க மக்கள் மட்டும்தான். எங்குமே பலவீனர்கள்தானே தாக்கப்படுகிறார்கள்?

அதுதான் இங்கும் நடக்கிறது. நடக்கட்டும்.அல்லி ராஜ்ஜியம்…..

இதுதான் எங்களோட இன்றைய நிலை!

அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருந்தோம்….. எந்தக் கொய்யா வந்தும் எதுவும் மாறவில்லை என்பது மட்டுமே நிஜம்.

தெரிந்தே செய்த தவறுக்குத் தண்டனை அனுபவிக்கட்டும் மக்கள். நன்றாக அனுபவிக்கட்டும்…..

அடுத்து எந்தப் புண்ணியவானாவது வரமாட்டானா என்று வழக்கம்போல எதிர்ப்பார்த்துக் காத்திருப்போம்.

அதுவரையிலும், பொம்பளைகளுக்கு இலவசமா நாப்கின் கொடுக்கிற மாதிரி, ஆம்பிளைங்களுக்கு இலவசமா கர்ச்சீப் கொடுக்கலாம். கட்டண உயர்வைப் பார்த்து வருகிற கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவாவது உதவும்..