எந்தத் தமிழனும் வரவில்லை!

ஈழப் படுகொலை…! அழைத்தோம் போராட்டத்திற்கு…..
எந்தத் தமிழனும் வரவில்லை…!
ஏன் என்று கேட்டதற்கு, அது பக்கத்து நாட்டுப் பிரச்சனை என்றான்…!

பால் விலையேற்றம்….! அழைத்தோம் போராட்டத்திற்கு….
எந்தத் தமிழனும் வரவில்லை…!
ஏன் என்று கேட்டதற்கு, அது தடுக்க முடியாதது என்றான்…!

எரிபொருள் விலையேற்றம்….! அழைத்தோம் போராட்டத்திற்கு….
எந்தத் தமிழனும் வரவில்லை…!
ஏன் என்று கேட்டதற்கு, அது மத்திய அரசு ஆணை…..
நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்…!

மீனவர் தாக்குதல்…! அழைத்தோம் போராட்டத்திற்கு….
எந்தத் தமிழனும் வரவில்லை…!
ஏன் என்று கேட்டதற்கு, மீனவன் ஏன் எல்லைதாண்டிப் போகிறான் என்றான்…!

முல்லைப் பெரியாறு பிரச்சனை…! அழைத்தோம் போராட்டத்திற்கு….
எந்தத் தமிழனும் வரவில்லை…!
ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு முல்லைப் பெரியாறு நீர் வருவதில்லை என்றான்…!

இதோ இன்று…
சபரி மலையில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்..! அழைப்போம் போராட்டத்திற்கு……
எந்தத் தமிழனும் வரமாட்டான் …!
ஏன் என்று கேட்டால், .யார் அவர்களை கேரளக் கோயிலுக்குப் போகச்சொன்னது என்பான் …!

ஆனால்…….
இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான
ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில்…..
எவனும் அழைக்க வில்லை…!

வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதிச் சீட்டு வாங்குகிறான்..!
ஏன் என்று கேட்டால், தேசப்பற்று என்கிறான்…!
அடேய் தமிழா!….. வாழ்க உனது தேசப் பற்று!

Courtesy…

http://www.facebook.com/futurenavin.

 

காரணம் சரிதானுங்களா?

ஆசிரியர் மானவர்களைப் பார்த்துக் கேட்டாராம்….

” மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”

ஒரு மாணவன் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து சொன்னானாம்….

“இதுக்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இல்லைங்க சார். 
மதிப்”பெண்கள்” என்பதை கொஞ்ச நாளைக்கு மாற்றி,
மதிப்”ஆண்கள்” என்று அழையுங்கள்… சரியாகிவிடும்!”

இன்னொரு மாணவன் இடையில் புகுந்து சொன்னானாம்….

“அப்படியே கல்விக்கடவுள் சரஸ்வதியை வேறு துறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு,
ஆம்பிளைக் கடவுளாப் பாத்து அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க!”

காரணம் சரிங்களா?

சரின்னு சொல்ற பொண்னுங்க எல்லாம் கையைத் தூக்குங்க பாக்கலாம்!